தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும், மீத்தேன் எரிவாயு திட்டத்தால் காவிரி டெல்டா மாவட்ட விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாவதை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் அளிக்கப்படும் உரம் மற்றும் இடு பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் போன்ற காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற டிசம்பர் 8–ந்தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் தஞ்சாவூர் ரெயில் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு: தஞ்சையில் ஜி.கே.வாசன் 8–ந்தேதி ஆர்ப்பாட்டம்
எனது தலைமையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தின் மூத்த முன்னணி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்குபெறுகிறார்கள்.
தமிழக விவசாயிகளின் நலனை காப்பதற்காக நடைபெறும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு தங்களது மேலான ஆதரவை அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top