தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அதன் பிறகு சென்னை திரும்பி சில நாட்கள் கட்சி பணியில் ஈடுபடாமல் ஓய்வு எடுத்து வந்தார். அதன் பிறகு மீண்டும் கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மீண்டும் மலேசியா புறப்பட்டுச் சென்றார். தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படப்பிடிப்புக்காக மலேசியா செல்வதாக விஜயகாந்த் கூறினார். ஒரு மாதம் வரை அங்கு தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் சென்று இருந்தனர்
விஜயகாந்த் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு 10.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோரும் வந்தனர்.
விமான நிலையத்தில் விஜயகாந்த்தை நிருபர்கள் சந்தித்து, நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும் என்று கேட்டனர்.
அதற்கு விஜயகாந்த் கூறுகையில், ‘‘நான் ஒரு மாதமாக வெளிநாட்டில் தங்கி இருந்ததால் இங்குள்ள அரசியல் நிலவரம் பற்றி தெரியவில்லை. டி.வி. செய்தியும் பார்க்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. எனவே என்ன பிரச்சினைகள் என்பது பற்றி இனிமேல்தான் கட்சி நிர்வாகிகளுடன் பேசுவேன்’’ என்றார்.
மேலும் அவரிடம், ‘‘உங்கள் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படம் முடிந்து விட்டதா? எப்போது வெளியாகும்’’ என்று கேட்டதற்கு, ‘‘அதுபற்றி தயாரிப்பாளருக்குத்தான் தெரியும்’’ என்று விஜயகாந்த் கூறினார்.
0 comments :
Post a Comment